Wednesday 25 May 2011

படிக்காதீங்க!!!!!!!!!!!!!!!!!

இதனால் சகலமானவருக்கும் சொல்வது என்னவென்றால்
யாரும் இனிமே படிச்சு தேர்வுகள் எழுதி தானும் கஷ்டப்பட்டு
மத்தவங்களையும் கஷ்டப்படுத்த வேண்டிய்தில்லீங்கோ

அப்ப வேலவெட்டி பாத்து புவ்வாவுக்கு காசு சம்பாதிக்க
வேண்டாமான்னு எல்லோரும் கேக்குறது புரியுது..

இது என்னாங்க ஜுஜுப்பி மேட்டர்

கருணையே உருவான தாய், யாதுமாகி நின்ற தேவி
பாசமே தஞ்சமடைந்த பராசக்தி, அன்பின் உறைவிடம்
புரட்சித்தலைவலி அம்மா இருக்கும்போது என்ன கவலை?

நீங்க செய்யவேண்டியது எல்லாம் நீங்க எதிர்ப்பார்க்கிற
வேலைக்குத்தகுந்த மாதிரி கையோ காலோ கண்ணோ
மூக்கோ எது சவுரியமோ அதை புரட்சித்தலைவலியின்
பெயரைச்சொல்லி வெட்டிக்கனும் அம்புடுத்தேன்...

எவ்வளவோ செய்யறோம் வேலைக்காக இதுகூட
செய்யலைன்னா எப்படி??!!!!

என்னாது மூளையிருக்காவா? அதெல்லாம் அம்மாவுக்கு
ஓட்டுபோடும்போதே கழட்டிவக்கனும்கிறத மறந்துட்டீங்களா!!!
எத்தனை ச.ம .உக்கள் அமைச்சர் பெருமக்கள் அவங்கள நீங்க
அவமானப்படுத்தாதீங்க....ஆமா சொல்லிப்புட்டேன்...




செய்தி:அதிமுகவின் தேர்தல்வெற்றிக்காக நாக்கை வெட்டிக்கொண்ட
சரிதாவுக்கு அரசுப்பணி.

..

..

4 comments:

  1. கிச்சா ரொம்ப முனேரிட்ட மாதிரி தெரியுது?
    அரசியல் பதிவு எல்லாம் போடா ஆரம்பிச்சாச்ச?
    very good , very good
    நல்ல இருக்கு . வார்த்தைகளில் இன்னும் நெளிவு சுளிவுகள் முயற்சி பண்ணுங்க . . .

    ReplyDelete
  2. ///@ செய்தி:அதிமுகவின் தேர்தல்வெற்றிக்காக நாக்கை வெட்டிக்கொண்ட
    சரிதாவுக்கு அரசுப்பணி. ///

    வேதனையான விஷியம் . . . மக்களும் திருந்த போறது இல்ல , அரசியல் வாதிகளும் திருந்த போறது இல்ல

    ReplyDelete
  3. ////நீங்க செய்யவேண்டியது எல்லாம் நீங்க எதிர்ப்பார்க்கிற
    வேலைக்குத்தகுந்த மாதிரி கையோ காலோ கண்ணோ
    மூக்கோ எது சவுரியமோ அதை புரட்சித்தலைவலியின்
    பெயரைச்சொல்லி வெட்டிக்கனும் அம்புடுத்தேன்...////

    வேலைக்கு தகுந்த மாதிரினா ?
    அப்போ பெரிய உத்தியோகம் கிடைக்கணும்ன சாகணுமா?
    என்ன கொடுமை இதெல்லாம்?

    ReplyDelete
  4. @♔ℜockzs ℜajesℌ♔™
    நன்றி ராஜேஷ்..ஆலோசனைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete