Sunday 29 July 2012

கடவுள் இருக்கான் கொமாரு!!

ஒருவாரம் முன்பு நண்பனுடைய கடைக்குச்சென்றிருந்தேன்.சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுதுதான் அந்த கேரக்டர்கள் எண்ட்ரி ஆயின.

வெள்ளை வேட்டி, உடலை போர்த்திய இன்னொரு வெள்ளை வேட்டி(கொஞ்சம் பெரிய்ய்ய்ய துண்டுதான்) ஒரே மாதிரியான கெட்டப்பில் நுழைந்தனர் மூன்று பேர்.

வந்தவுடனே ”பெரியவாள்ளாம் வந்திருக்கா “நான் இன்னும் யார் வருகிறார்கள் என்று வெளியே எட்டிப்பார்த்தேன்.யாருமில்லை. சுய அறிமுகமாம்.

அடுத்து மூன்று பேருமே ஒரே சமயத்தில் மந்திரத்தை ஓத ஆரம்பித்தார்கள்.

ஓதி முடித்தவுடன் ”மூணு பேர் இருக்கோம் பாத்து எதாவது செய்யுங்கோ”

நண்பன் முடிந்தவரை விரட்டிப்பார்த்தான்.ம்ஹூம் நகரும் வழி காணோம்.

நண்பனோட அப்பா வந்தவர்களை வியாபார நேரத்தில் நிறுத்திவைக்க பிரியப்படாமல் பத்து ரூபாய் குடுத்து அனுப்புடா என்றார்.

”எங்களுக்கு பணம் வேண்டாம் .மூணு பேருக்கும் சாப்பாடு வாங்கி கொடுங்க உங்க கையால, நன்னா இருப்பீங்க”

கடைசியில் பேரம் படிந்து 50ரூ ”தானமாக” பெற்றுச்சென்றனர்.

அப்பொழுதுவந்த இன்னொரு நண்பன் சொன்னான் இந்த மாதிரி தமிழகமெங்கும் கிளை பரப்பி மந்திரம் ஓதிக்கிட்டு இருக்கிறார்களாம்.

அது சரி ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்க போல என்று நினைத்துக்கொண்டேன்.

உதயகீதம் என்ற படத்தில் கவுண்டர் மரத்துக்கு மரம் உண்டியல் வைத்து ஆன்மீகம் வளர்த்த காட்சி ஏனோ நினைவுக்கு வந்தது.

ஒரு மூன்று நாட்கள் கழித்து அதே கெட்டப் வேறு மந்திரம் வேறு இருவர்.
இம்முறை எங்கள் அலுவலகத்துக்கு.

அடேய்ய்ய்ய்ய்ய்ய்!!!

அவர்களைத்துரத்தி அனுப்பிய ஒரு மணி நேரத்தில் இரு பெண்களும் ஒரு ஆணும் உள்ளே நுழைந்தனர்.கையில்ஒரே ஒரு பிட் நோட்டீஸ்.

“பக்கத்தூரு முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யுறோம்,ஏதோ உங்களால ஆன பண உதவி செய்யனும்”





இந்த கடவுள் எத்தனை பேரை வாழவைத்துக்கொண்டிருக்கிறான்!!!
...

...

...


1 comment: