Tuesday 30 August 2011

பசி

பசி இல்லையென்றால் என்னவாகும்
இப்படி ஒரு சிந்தனை ஓடியது எனக்கு

பசி நம் உடலின் சர்வாதிகாரி

பசி அது எதை வேண்டுகிறதோ அதை
அடையாமல் ஓய்வதில்லை

  நாம் ஓடும் ஓட்டம் ஆடும் ஆட்டம்
அத்தனையும் நிர்ணயிப்பது பசி

பசி என்னும் உணர்வு இல்லாவிடில்
உடற்பசி முதல் அதிகாரப்பசி வரை
எதுவும் இருக்காது என நினைக்கிறேன்
பசி இல்லாத உலகு வெகு சீக்கிரம்
அழிவுக்கு செல்லக்கூடும்
போராட்டங்கள் இல்லாத வாழ்வு நிலைக்குமா என்ன
எண்ணிப்பாருங்கள்
காடுகளில் வேட்டையில்லை
சிறுமானும் சில்வண்டும் சிறுத்தையும்
எண்ணிக்கை பெருகி காங்கிரீட் காடுகளுக்கு
படையெடுக்கும் காட்சியை

வயிற்றுப்பசி இல்லாத மனிதன் எத்தனை
இலக்கியம் படைப்பான் அப்படி படைக்கும்
இலக்கியத்தில் சுவைதான் இருக்குமா என்ன

பசி இல்லாவிடில் கடவுளுக்கும் வேலை இருக்காது

சமரசம் பொங்கும் வாழ்வு கிடைக்கிறதோ தெரியாது
சுவாரசியம் இல்லா வாழ்வுதான் எஞ்சும்


ஏனோ என் வரையில் தோன்றிய எண்ணங்களை
சொல்லிவிட்டேன்


இறுதியாக “உணவை வீண் செய்யாதீர்கள்”









No comments:

Post a Comment