Wednesday 25 July 2012

ஒரு சுற்றுலா குறிப்பு

இது ஒரு சுற்றுலா குறிப்பு.

அப்பல்லாம் சுற்றுலான்னு சொன்னா குடும்பத்தோட கோவில் கோவிலா கூட்டிக்கிட்டு போவாங்க..

அது மாதிரியில்லாம காலேஜ் முடிச்சவுடனே ஃபிரண்ட்ஸ் எல்லோரும் லீவுக்கு எங்கயாவது முதல்முறையா தனியா(குடும்பத்தோட இல்லாம) போலாம்னு முடிவு செஞ்சோம்.

கொடைக்கானல் போகலாம்னு ஏக மனதா தீர்மானிச்சு கிளம்பிட்டோம் ஒரு படையா..

பஸ்ல போனாத்தான் ஊர் உலகம் பத்தி தெரியும் நாலு மனுஷங்களப்பாத்து பழகலாம்னு அதுலயே போனோம்...(சரி சரி காறித்துப்பாதீங்க அப்போ அம்புட்டுதான் வசதி)

சேலத்துல இருந்து  பஸ் ஏறுறதுக்கு முன்னாடி சாப்பிட்டு விட்டு ஏறிக்கலாம்னு பஸ் ஸ்டாண்ட் முன்னாடி இருந்த ஹோட்டல்ல சாப்பிட்டோம் ..பஸ் ஸ்டாண்ட் வந்தவுடனே 2 பேரு ஆளையே காணோம் ..எல்லாம் ஹோட்டல் மகிமை ..ஒருவழியா வந்தார்கள் சென்றவர்கள் ..

விடியல்காலையில் போய்  இறங்கினோம்..

ஒவ்வொருத்தனும் புதிய வானம் புதிய பூமின்னு பாடமட்டும்தான் செய்யல..அவ்ளோ பெருமை மூஞ்சி பூரா வழிஞ்சது...

தங்குறதுக்கு அலைஞ்சோம் பாருங்க என்ன காரணமோ ரூமே கிடைக்கல ..

கடைசியா ஒரு புண்ணிய ஆத்மா ரூம் கொடுத்தாரு...அதை அறைன்னு சொல்றதவிட பாதாளக்கிடங்குன்னு சொல்லியிருக்கலாம் .. கட்டில்கள் இருந்துச்சு  பரவாயில்லை ...

பாத்ரூம் போன நண்பன் போன உடனே சத்தமா பாட ஆரம்பிச்சான்..

ஏண்டான்னு கேட்டா தாழ்ப்பாள் இல்லையாம் கதவுக்கு ..

மனச தேத்திக்கிட்டு ஒவ்வொருத்தரா பாடி கூவி முடிச்சுட்டு வெளிய ஊர் சுத்திட்டு வந்தோம்..

ஊர் என்னவோ அழகாத்தான் இருந்தது...முட்டாய்கடைக்காரன் பட்டிக்காட்டானைப்பாத்தா மாதிரி சுத்தோ சுத்துன்னு சுத்தி பாத்தோம் 

ராத்திரி சாப்பாடு அங்கேயே ஆர்டர் பண்ணோம்..சப்பாத்திக்கு தொட்டுக்க என்ன வேணும்னு கேட்டு எழுதுனப்பவே உஜாராயிருக்கனும் எங்கூரு கடையில புரோட்டாவுக்கு குழம்பை கட்டி அடிக்கிற மாதிரி கலந்து கட்டினோம் பில் வந்தப்புறம் உய்யலாலா எல்லாம் நொந்தலாலா ஆயிட்டோம் குழம்புக்கு தனிக்காசுன்னு அப்பதான் முதல்முறையா கேள்விப்பட்டோம்...அவ்வ்வ்வ்வ்

பொறவென்ன அடுத்த நாள் சிக்கனமா செலவு பண்ணி ஊருக்கு கிளம்பிட்டோம்..

பழனிக்கு போயி நட்ட நடு ராத்திரியில் ஆட்டோஸ்டாண்ட் பின்னாடி இருந்த சாக்கடையில் நிம்மதியா உச்சா கூட போக முடியாம ஆளாளுக்கு துரத்த நெம்ப அவஸ்தையில் இருந்தவன் அடிவாங்குனாலும் பரவாயில்லன்னு அதை சாதிக்கன்னு ஒரு இரவில்தான் எத்தனை அல்லல்கள்..

அந்த நேரத்துக்கு பஸ்களும் இல்லாம ஒரே குஷ்டமப்பா...

 பிறகு கொடுமுடி கரூர்ன்னு ரூட்டு தெரியாம பஸ் ஏறி இறங்கி வெந்தசாமிகள் ஆயிட்டோம்...

அப்புறம்  ஒரு நியூஸ்பேப்பர் வேன்காரன்கிட்ட பேசி வண்டியில அடைச்சுக்கிட்டு வந்து ஒருவழியா சேலம் வந்து சேர்ந்தோம்...


எல்லோர் வீட்டிலும் எப்படி இருந்துச்சு டூர்ன்னு கேட்டப்ப சூப்பர்னுதான் சொன்னோம் வேற வழி..




ஒரு திட்டமிடல் இல்லாது ஆலோசனை கேட்கவும் மனம் இல்லாமல் அலட்டலில் போய்வந்த முதல் உலா அது.ஆனாலும் இப்போ நினைச்சாலும் கசக்கவில்லை..
..
..
..






No comments:

Post a Comment